ஆப்நகரம்

ஊரடங்கில் அடுத்த தளர்வு: மத்திய அரசு அறிவிப்பு!

அரசியல் கூட்டங்கள் நடத்துவது தொடர்பான தளர்வு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2020, 5:57 am
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் ஆறு மாதங்களைக் கடந்து தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil lockdown relaxation


தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி ஆகிய அறிவிப்புகள் வெளிவந்த பின்னரே இயல்பு நிலை மெல்ல திரும்பத் தொடங்கியது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்தும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசு இன்னும் அது குறித்து முடிவெடுக்கவில்லை.

ராம் விலாஸ் பஸ்வான் மறைவு: தேசிய தலைவர்கள் இரங்கல்!

தற்போது மத்திய அரசு மேலும் ஒரு தளர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது முடக்க காலத்தில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஒன்று கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 100 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கும் அரசியல் கூட்டங்கள் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், மக்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு 200 சிறப்பு ரயில்கள்..! சென்னையில் இருந்து எவ்வளவு ட்ரைன்?

அதே போல் உள் அரங்குகளில் நடைபெறும் கூட்டங்களில் 50 சதவீதம் பேர் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு 200 பேருக்கு மேல் கூட்டத்தை கூட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி