ஆப்நகரம்

குறுக்கு வழியில் தரிசனம்: அரசு அதிகாரிக்கு திருப்பதி ஏழுமலையான் கொடுத்த தண்டனை!!

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க, போலி ஆவணங்கள் மூலம் விஐபி தரிசன டிக்கெட் வாங்க முயன்ற, தெலங்கானா மாநில அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 8 Jan 2020, 9:09 pm
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து பாலாஜியை தரிசித்து செல்கின்றனர்.
Samayam Tamil குறுக்கு வழியில் தரிசனம்: அரசு அதிகாரிக்கு திருப்பதி ஏழுமலையான் கொடுத்த தண்டனை


நாள்தோறும் கூட்டம் நிரம்பி வழிவதால், பல மணிநேரம் க்யூவில் காத்திருந்து தான் இங்கு பக்தர்கள சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே, பொது தரிசனத்துடன், கட்டண தரிசனம் மற்றும் விஐபி தரிசன முறையும் இங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலம் விஐபி தரிசன டிக்கெட் பெற முயன்று, அதன் மூலம் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ட தெலங்கானா மாநில அரசு அதிகாரி ஒருவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு இனிப்பான செய்தி!!

தெலங்கானா மாநில அரசின் கைத்தறி துறை மேலாளராக பணிபுரிபவர் அருண்குமார் பாண்டு. இவர், விஐபி தரிசன டிக்கெட் பெற்று, திருப்பதி ஏழுமலையானை துரிதமாக தரிசிக்க விரும்பியுள்ளார்.

இதையடுத்து, ஆந்திர மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரியாக போலி ஆவணங்களை தயார் செய்து திருமலையில் விஐபி தரிசன டிக்கெட் பெற பாண்டு முயற்சி செய்துள்ளார்.

இதற்காக அவர் சமர்பித்த ஆவணங்களை தேவஸ்தான ஊழியர்கள் சரிபார்த்தபோது, அவர்களுக்கு அந்த ஆவணங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.

2019: பணக்கார சாமியை தரிசித்தவர்கள் எத்தனை கோடி பேர் தெரியுமா?!

இதையடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விஜிலன்ஸ் அதிகாரிகள், அருண்குமார் பாண்டுவின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவை போலி எனத் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி