ஆப்நகரம்

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? - அரசு வட்டாரத் தகவல்

ஊரடங்கு நீட்டிக்கபட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 7 Apr 2020, 4:07 pm
ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil plan a - plan b


கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த 21 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்களிடையே பல்வேறு விதமான குழப்பமான பதில்கள் நிலவி வந்தன. ஆனாலும், அரசுத் தரப்பில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

ஆனால், இந்த வதந்திகளைக் குறித்து ஒரே ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்றால், கேபினட் செக்ரட்டரி ராஜீவ் கௌபா தெரிவித்ததுதான். அவர் தெரிவித்ததாவது, “ஊரடங்கை நீட்டிக்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன. அப்படி ஊரடங்கை நீட்டிக்கும் எந்தவொரு திட்டமும் இல்லை”

மோடியை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்; ஏன்? எதற்கு?

ஆனால், இப்போது பல மாநில அரசுகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கேட்டுக்கொள்வதற்கு இணங்க, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.


ஒரு சிறந்த நாளுக்காக இன்னும் கொஞ்ச காலம் கஷ்டத்தோடு வாழலாம் : துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

மேலும், இன்று காலை இந்திய துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதையும் கவனிக்கும் போது, ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாகவே புலனாகிறது.

அடுத்த செய்தி