ஆப்நகரம்

டெல்லியில் ஒன்றுகூடும் ஆளுநர்கள்; குடியரசுத் தலைவர் தலைமையில் மாநாடு!

48வது ஆளுநர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.

TNN 12 Oct 2017, 5:44 am
டெல்லி: 48வது ஆளுநர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.
Samayam Tamil governors meeting will start today in delhi
டெல்லியில் ஒன்றுகூடும் ஆளுநர்கள்; குடியரசுத் தலைவர் தலைமையில் மாநாடு!


தலைநகர் டெல்லியில் இன்று மற்றும் நாளை, ஆளுநர்கள் மாநாடு நடைபெறுகிறது. 48வது மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கு புதிதாக பதவியேற்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகிக்கிறார். 27 மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் 3 துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் ‘புதிய இந்தியா 2022’–க்கான சாத்தியக்கூறுகள் குறித்து ‘நிதி ஆயோக்’ வழங்கும் கருத்தாக்கம் இடம்பெறுகிறது. மாநிலங்களில் உயர்கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்பட சில அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

Governors meeting will start today in Delhi.

அடுத்த செய்தி