ஆப்நகரம்

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய கட்டாயப்படுத்தும் டெல்லி அரசு

டெல்லியில் அனைத்து அரசு துறைகளும், தன்னாட்சி அமைப்புகளும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

TNN 4 Sep 2017, 11:28 am
டெல்லி: டெல்லியில் அனைத்து அரசு துறைகளும், தன்னாட்சி அமைப்புகளும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil govt directs all depts to accept digital payments
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய கட்டாயப்படுத்தும் டெல்லி அரசு


டெல்லியில் நிதி அமைச்சகம் அனைத்து அரசு துறைகளுக்கும், தன்னாட்சி அமைப்புகளுக்கும் சமீபத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய டிஜிட்டல் முறையில் மட்டுமே செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் மக்களிடம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. அப்போது, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது. மத்திய அரசின், டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை திட்டத்தை, டில்லி அரசும், அதிக முக்கியத்துவம் தந்து, செயல்படுத்த முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி