ஆப்நகரம்

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய உயர்வு- ஊரடங்கில் இப்படியொரு ஹேப்பி நியூஸ்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தேசிய அளவில் வருமானத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 31 Mar 2020, 12:44 pm
நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் 21 நாட்கள் உத்தரவு அமலில் இருக்கிறது. இதன்மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டில் இருந்த வந்தவர்கள் மூலம் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil ஊரக வேலைவாய்ப்பு


அவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

கோவிட்19-ஐ விட இது ரொம்ப மோசமானது போலயே; கடவுளின் தேசத்தில் இப்படியொரு சோகம்!

அதன்படி தேசிய அளவில் சராசரியாக ரூ.20 என்ற அளவில் ஊதியம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த நடவடிக்கை எஸ்.சி, எஸ்.டி, பெண் குடும்பத் தலைவர்கள் இருக்கும் வீடுகள் மற்றும் சிறு, நடுத்தர விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊதியத்தை வழங்கும் போது லாக் டவுன் உத்தரவை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். சமூக விலகல் என்ற இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி நடப்பு வாரத்தில் ரூ.4,431 கோடியை மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எஞ்சிய தொகையானது வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு விடுவிக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு மட்டும் ரூ.721 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி