ஆப்நகரம்

முப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்கும் புதிய சட்ட திருத்தம்

இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

Samayam Tamil 19 Mar 2018, 7:23 am
டெல்லி: இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
Samayam Tamil govt moves on integrated theatre commands amends rules to bring three forces under single leadership
முப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்கும் புதிய சட்ட திருத்தம்


இந்திய ராணுவத்தில் காலாட்படை, கடற்படை மற்றும் விமானப்படை என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு தனித்தனியே மூன்று தலைவர்களாக முப்படைகளின் தலைவர்கள் உள்ளனர். இதற்கு மாற்றாக முப்படைகளையும் ஒரே தலைமையின் கீழ் ஒருங்கிணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதாவையும் தயாரித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் மூலம் எந்த படையில் சிறந்து விளங்குபவரும் மற்ற இரு படைகளின் மீதும் தாக்கம் செலுத்தும் நிலைக்கு உயர முடியும் என்ற மத்திய அரசு எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இதே போன்ற ஒருங்கிணைந்த ராணுவத் தலைமை அந்தமான் நிகோபார் தீவுகளில் மட்டும் 2001ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. ஆனால், படைகளுக்கு இடையேயான உட்பகை, நிதி ஒதுக்குவதில் பிரச்னை போன்றவற்றால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி