ஆப்நகரம்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாத சிறை?

வயதான பெற்றோரை கைவிடுபவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கும் வகையிலான வரைவு மசோதாவை பிரதமர் மோடி அரசு தயாரித்துள்ளது.

Samayam Tamil 12 May 2018, 4:07 pm
வயதான பெற்றோரை கைவிடுபவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கும் வகையிலான வரைவு மசோதாவை பிரதமர் மோடி அரசு தயாரித்துள்ளது.
Samayam Tamil பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாத சிறை?
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாத சிறை?


2007ஆம் ஆண்டின் , மூத்த குடிமக்களுக்கான கண்காணிப்பு மற்றும் நலம்பேணும் சட்டமானது பெற்றோரை கைவிடுபவர்களுக்கு 3 மாத கால சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த நிலையில் இன்னும் சில திருத்தங்களைக் கொண்டு வந்து, சில பிரிவுகளைச் சேர்க்க சமூக நீதி மற்றும் அதிகாரபகிர்வு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த சட்டத்திற்குள் தத்து எடுக்கப்பட்டவர்கள், மறுதாரத்தின் பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், சிறுவர் பிரதிநிதிகள் என வயதானவர்களால் சட்ட பாதுகாப்புக்கு உட்பட்டவர்கள் அனைவரும் கொண்டு வரப்பட உள்ளனர். தற்போது இருக்கும் சட்டத்திற்குள் தங்களுக்கு பிறந்த மற்றும் அவர்களுடைய பேரன், பேத்திகள் மட்டும் வருகின்றனர்.

தற்போது சமூக நீதிக்கான அமைச்சகம் பெற்றோர், மூத்த குடிமக்களுக்கான கண்காணிப்பு மற்றும் நலம்பேணும் திருத்தச் சட்டம் 2018 என்ற பெயரில் புதிய சட்ட வரைவு ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட வரைவு அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர், முந்தைய சட்டத்தை நீக்கிவிடும்.

இந்த வரைவு சட்டத்தில் பெற்றோருக்கு மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும் என்ற சிறப்பு அம்சம் இடம் பெற்றுள்ளது. இந்த விகிதம் மாறுபடும்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அதிகம் சம்பளம் வாங்கும் பிள்ளைகள் தங்களது பெற்றோருக்கு அதிகமாக வழங்க வேண்டியது இருக்கும். கண்காணிப்பு என்பது உணவு, உடை, வீடு, மருத்துவம், பாதுகாப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது'' என்றார்.

பெற்றோரை கைவிடும் பிள்ளைகள் குறித்து கண்காணிப்பு தீர்ப்பாயத்தில் புகார் கொடுக்கலாம்.

அடுத்த செய்தி