ஆப்நகரம்

ரூ.32,000 கோடி மதிப்பிலான ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ரத்து

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் போடப்பட்ட கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Jan 2018, 5:59 pm
பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் போடப்பட்ட கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
Samayam Tamil govt nixes rs 32000 crore make in india minesweepers project
ரூ.32,000 கோடி மதிப்பிலான ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ரத்து


எதிரி நாட்டின் கப்பல்கள் கடலில் புதைத்து வைக்கும் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட கப்பல்கள் இந்திய கடற்படையில் வெறும் 4 மட்டுமே உள்ளது. ஆனால், 24 கப்பல்களாவது தேவைப்படுகிறது. இதனால், இத்தகு கப்பல்களை புதிதாக தயாரிக்க வேண்டும் என்று தற்போதைய கோவை முதல்வரும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் வலியுறுத்தி வந்தார்.

இதன் எதிரொலியாக, பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் கண்ணி வெடிகளை அகற்றும் கப்பல்கள் (MCMV) கட்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. 12 கண்ணி வெடிகளை அகற்றும் கப்பல்களைத் தயாரிப்பதற்காக, கங்னம் (Kangnam) என்ற தென்கொரிய கப்பல் கட்டும் தளத்துடன் ரூ.32,000 மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து, 700 கோடி ரூபாய் செலவில் அதற்கான கட்டமைப்புகள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் அமைக்கப்பட்டன. இச்சூழலில், தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் இந்த கப்பல் கட்டும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்த அறிவிப்பை புதிதாக வெளியிட கோவா கப்பல் கட்டும் தளத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனா கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அணு ஆயுதக் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்திய கடற்படைக்கு கண்ணி வெடிகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் கப்பல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதப்படுகிறது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்