ஆப்நகரம்

அரசு உயர்பதவிகளில் தனியார் நிறுவன நிபுணர்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு!

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற நிபுணர்களை, அரசு நேரடி உயர் பதவிகளில் நியமிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 11 Jun 2018, 11:55 am
தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற நிபுணர்களை, அரசு நேரடி உயர் பதவிகளில் நியமிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil அரசு உயர்பதவிகளில் தனியார் நிறுவன நிபுணர்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு!அரசு உயர்பதவிகளில் தனியார் நிறுவன நிபுணர்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு!
அரசு உயர்பதவிகளில் தனியார் நிறுவன நிபுணர்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு!


அரசுத் துறைகளில் திறமைவாய்ந்த மனிதவளத்தை அதிகரிக்கும் பொருட்டு “லேடரல் என்ட்ரி முறை”யை நிதி ஆயோக் குழு பரிந்துரை செய்தது. அதன்படி வருவாய், நிதி சேவை, பொருளாதார விவகாரங்கள், வேளாண் ஒத்துழைப்பு-விவசாயிகள் நலன், சாலைப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விமானப் போக்குவரத்து மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் அரசு நேரடி உயர்பதவிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு உயர்பதவிகளில் தனியார் நிறுவன நிபுணர்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு!

அரசு உயர்பதவிகளில் தனியார் நிறுவன நிபுணர்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு!


இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பணியாற்ற விரும்பும் நபர்கள், ஆன்லைனில் மூலம் ஜீலை 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 40 வயதுக்கும் மேற்பட்ட, குறைந்தது 15 ஆண்டுகள் துறை சார்ந்த அனுபவமுள்ள நிபுணர்களாக இருக்க வேண்டும். தகுதி பெற்ற நபர்கள் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பின்னர் செயல்பாட்டின் அடிப்படையில் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவர்களுக்கு இணை செயலாளர் பதவிக்கு இணையான தங்குமிடம், வாகன வசதி மாதத்துக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி