ஆப்நகரம்

செயல்திறன் மிக்க அதிகாரிகளுக்கே பதவி உயர்வு: மத்திய அரசு திட்டவட்டம்!

அரசு துறைகளின் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் திறமைகள் மதிப்பிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Jun 2018, 9:16 pm
டெல்லி: அரசு துறைகளின் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் திறமைகள் மதிப்பிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Central Govt


நாடு முழுவதும் 5,004 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் திறன், பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்றவற்றை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. இதற்காக பணித்திறன் மதிப்பீடு படிவம் வழங்கப்படுகிறது. இதனைப் பூர்த்தி செய்து, தலைமைச் செயலாளரிடம் வழங்க வேண்டும்.

நடப்பாண்டில் படிவம் 1, படிவம் 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் படிவம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பொருந்தும். இவர்கள் பணியில் நேர்மை அடிப்படையில் மதிப்பிடப்படுவர். இரண்டாவது படிவம் துறைச் செயலர், கூடுதல் செயலர் ஆகியோருக்கு பொருந்தும்.

இவர்கள் நிதி ஒழுக்கம் மற்றும் நேர்மை, நெருக்கடி காலங்களில் எடுத்த சரியான முடிவுகள், உத்தரவுகள் குறித்து படிவத்தில் குறிப்பிட வேண்டும். சமுதாயத்தில், பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்களிடம் காட்டிய அணுகு முறைகள் மதிப்பிடப்படும்.

மேலும் எடுத்த முடிவிற்காக கடைசி வரை துணிவுடன் போராடியது, புதிய அணுகுமுறைகள், குழுவை ஒருங்கிணைத்து செயல்படுத்துதல் குறித்து 50 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிட வேண்டும்.

புதிய மாற்றங்கள் குறித்து வரும் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Govt Officers talent will be evaluated for promotions says Central Govt.

அடுத்த செய்தி