ஆப்நகரம்

அந்தரத்தில் தொங்கிய பேருந்து: உயிர் தப்பிய 30 பயணிகள்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூடு பனி காரணமாக சாலையில் இருந்து விலகிய பேருந்து ஒன்று அந்தரத்தில் தொங்கியதால் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

Samayam Tamil 25 Dec 2018, 12:06 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூடு பனி காரணமாக சாலையில் இருந்து விலகிய பேருந்து ஒன்று அந்தரத்தில் தொங்கியதால் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
Samayam Tamil bus


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஸ்த்வார் என்ற மாவட்டத்திலிருந்து ஜம்மு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 30 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது, சாலை முழுவதும் சூழ்ந்திருந்த பனி காரணமாக டயர்கள் வழுக்கி சென்றன. இதனால், மலை உச்சியில் சாலையோரத்தில் உள்ள சுவர்களுக்கு இடையில் பேருந்து சிக்கியபடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

அப்போது, எங்கு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் பயணிகள் அலறினர். ஆனால், அப்படி ஏதும் விபரீதம் நடக்காமல், பேருந்து பள்ளத்தாக்கில் விழாமல் சிறிது நேரம் அப்படியே தொங்கியபடி இருந்தது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால், பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி