ஆப்நகரம்

ஸ்கூலுக்கு போன பிறகு கொரோனா அறிகுறிகள் வந்தால் என்ன செய்வது? - வழிகாட்டுதல்கள் இதோ!

பள்ளிகளுக்குச் சென்ற பிறகு மாணவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 9 Sep 2020, 8:08 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் நான்காம் கட்ட ஊரடங்கில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அம்சம் இடம்பெற்றிருந்தது. அதாவது 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வரும் 21ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனைகளைப் பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
Samayam Tamil School Reopening News


அதில், மாணவர்கள்/ ஆசிரியர்கள்/ பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை இருந்தால் என்ன செய்வது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,

* சம்பந்தப்பட்ட நபரை தனி அறையில் அமர வைக்க வேண்டும். அல்லது மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையிலான இடத்தில் அமர வைக்க வேண்டும்.

* உடனே பெற்றோர்கள்/ பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* தனிமையில் இருந்தாலும் முகக்கவசம் தொடர்ந்து அணிந்திருக்க வேண்டும். மருத்துவர்கள் வரும் வரை அப்படியே தொடர வேண்டும்.

பள்ளிகள் திறக்கும் முன், திறந்த பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

* அருகிலுள்ள மருத்துவமனை/ கிளினிக்குகள் அல்லது மாநில/ மாவட்ட உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* பொது சுகாதாரத்துறை அதிகாரி மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு இருக்கும் பாதிப்பின் தீவிரம் கண்டறியப்பட வேண்டும். அதற்கேற்ப அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், பாதிப்பிற்கு ஏற்ப சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும்.

* ஒருவேளை அறிகுறிகள் தென்பட்ட நபருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் இருந்த இடங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

அடுத்த செய்தி