ஆப்நகரம்

பேசிக்கொண்டிருந்தபோதே மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்

வதோதராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ருபானி.

Samayam Tamil 14 Feb 2021, 11:07 pm
குஜராத் முதல்வர் விஜய் ருபானி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, வதோதராவில் உள்ள நிஜாம்புரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் ருபானி கலந்துகொண்டு பேசினார்.

கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அவர் பேசத்தொடங்கியபோதே உடல்நிலை சரியில்லாதது போல தோன்றினார். முதலில் வதோதராவில் உள்ள தர்சாலி, கரேலிபவுக் ஆகிய பகுதிகளில் உரையாற்றிவிட்டு நிஜாம்புராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்தார்.

மேடையில் பேசத் தொடங்கியவுடன் திடீரென மயங்கி விழுந்தார் முதல்வர் விஜய் ருபானி. அப்போது அவருக்கு பின்னால் இருந்த பாதுகாவலர் அவரை தாங்கி பிடித்துக்கொண்டார். மேடையில் இருந்த மற்ற பாஜக தலைவர்கள் உதவிக்கு வந்தனர். இருப்பினும், மேடையிலேயே மயங்கி விழுந்தார் முதல்வர் ருபானி.

உடனே அவர் அரசு விமானத்தில் அகமதாபாத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவர் தற்போது நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து விஜய் ருபானி, “சிறிது தலைச்சுற்றுவது போல் மயக்க உணர்வு ஏற்பட்டது. தொடர் பயணங்களின் காரணமாக நான் சோர்வடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி அர்ப்பணிக்கும் அர்ஜுன் கவச வாகன சிறப்புகள் என்ன?
நான் நலமுடன் இருக்கிறேன். எனவே பொதுமக்களும், தொண்டர்களும் கவலைகொள்ள வேண்டாம். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி