ஆப்நகரம்

மாஸ்க் போடலயா? போச்சு உங்களுக்கு இப்படியொரு தண்டனையாம்!

முகக்கவசம் அணியாவிட்டால் அளிக்க வேண்டிய தண்டனை குறித்து உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2020, 3:17 pm
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். திரும்பிய பக்கமெல்லாம் இதன் பெயர் தொடர் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பாதிப்பு வந்த பிறகு குணப்படுத்த எந்தவித மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே முகக்கவசம், போதிய சரீர இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் நம்மை பாதுகாக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பான வீடியோ பெரிதும் வைரலானது.
Samayam Tamil Mask Punishment in Gujarat


அதாவது ஏராளமானோர் கூடி முகக்கவசம் அணியாமல் மிகவும் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். திருமணம், இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 200 பேர் தான் பங்கேற்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்டிருக்கின்றனர்.

இது மாநில உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. இந்த விவகாரத்தால் நீதிபதிகள் மிகவும் கோபமடைந்துள்ளனர். இதுபோன்று முகக்கவசம் அணியாமல் திரிபவர்களை பிடித்து கொரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயமாக வேலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியா, யார் சொன்னது?

இந்த உத்தரவு நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் 2,11,257 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 1,477 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இம்மாநிலத்தில் குணமடையும் விகிதம் 91.06 சதவீதமாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக இதுவரை 78,94,467 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி