ஆப்நகரம்

தலித் இளைஞரை அடித்து உதைத்து மீசை எடுக்க வைத்த கொடுமை

குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர் ஒருவரை உயர்சாதியினர் சிலர் அடித்து உதைத்து மீசை எடுக்க வைத்துள்ளனர்.

Samayam Tamil 31 May 2018, 4:23 pm
பலன்பூர்: குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர் ஒருவரை உயர்சாதியினர் சிலர் அடித்து உதைத்து மீசை எடுக்க வைத்துள்ளனர்.
Samayam Tamil 64393583


குஜராத் மாநிலம் பலான்பூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ரஞ்சித் தாகூர். தலித் இளைஞரான இவர் ஜூன் 4ஆம் தேதி தனது கிராமத்தில் நடைபெற உள்ள முடி இறக்கும் விழாவுக்கான அழைப்பிதழை வழங்க கடந்த மே 27ஆம் தேதி காட் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

அழைப்பிதழில் அந்த இளைஞரின் பெயர் ரஞ்சித் சின்ஹ் என்று இருந்துள்ளது. இதை கவனித்த அந்த ஊர் உயர்சாதியினர் சிலர் சின்ஹ் என்ற பெயரை எப்படி பயன்படுத்தலாம் என்று கூறி இளைஞரிடம் சண்டைக்கு வந்துள்ளனர்.

பின் ரஞ்சித்தை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச்சென்ற அவர்கள் அவரை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக மீசையை எடுக்க வைத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக ரஞ்சித் பலான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் ரஞ்சித் 15 பேரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் புதன்கிழமை மதூர்சின்ஹ் பாபி என்பவரை மட்டும் கைதுசெய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித்தின் தந்தை, தனது மகனுடைய பள்ளி மாற்றுச்சான்றிதழில்கூட ரஞ்சித்சின்ஹ் என்ற பெயர்தான் குறிப்பிடப்பட்டிருந்தது என்று கூறுகியுள்ளார்.

அடுத்த செய்தி