ஆப்நகரம்

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்யானந்தா; இறுகுகிறது பிடி!!

நன்கொடை பெறுவதற்காக குஜராத்தில் சட்டத்திற்கு விரோதமாக பெண்களை சிறை வைத்து இருக்கிறார் என்பது நித்யானந்தா மீதான குற்றச்சாட்டு

Samayam Tamil 22 Nov 2019, 12:25 pm
நன்கொடை பெறுவதற்காக குஜராத்தில் சட்டத்திற்கு விரோதமாக பெண்களை சிறை வைத்து இருக்கிறார் என்பது நித்யானந்தா மீதான குற்றச்சாட்டு
Samayam Tamil gujarat police says that nithyananda has fled india
வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்யானந்தா; இறுகுகிறது பிடி!!


நித்யானந்தா

நித்யானந்தா மீது தொடரும் குற்றச்சாட்டுக்கள்

நித்யானந்தா மீது புகார்

அகமதாபாத்தைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா மற்றும் அவரது மனைவி இருவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்து இருந்தனர்.

குஜராத் பெண்கள் சிறை வைப்பு

அந்த மனுவில் 7-15 வயதுக்குட்பட்ட தங்களது நான்கு மகள்களை 2013இல், பெங்களூரில் இருக்கும் நித்யானந்தாவின் கல்வி நிலையத்தில் சேர்த்தோம். தங்களது மகள்களை அங்கிருந்து அகமதாபாத் அருகில் யோகினி சர்வகியாபீடத்திற்கு மாற்றி விட்டதாக தகவல் கிடைத்தது. இந்த விஷயம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

நித்யானந்தா மீது தொடரும் சர்ச்சைகள்

இதையடுத்து அவர்களை சந்திக்க சென்றோம். ஆனால், அவர்களை சந்திக்க முடியவில்லை. முதலில் இரண்டு மகள்களை அழைத்து வந்துவிட்டோம். மற்ற இரண்டு மகள்களான லோப்முத்ரா மற்றும் நந்திதா இருவரும் வர மறுத்து விட்டனர்'' என்று தெரிவித்து இருந்தனர்.

நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு

இதையடுத்து நித்யானந்தா மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கர்நாடகா நீதி மன்றமும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

நித்யானந்தா மீது இறுகும் பிடி

தற்போது நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக குஜராத் காவல் துறை தெரிவித்துள்ளது.


குஜராத் காவல் துறை நேற்று நித்யானந்தா ஆஸ்ரமத்தின் இரண்டு மேலாளர்களை கைது செய்து இருந்தது. மேலும், சிபிஎஸ்இ பள்ளி நடத்துவதற்கு எவ்வாறு நித்யானந்தாவின் ஆஸ்ரமத்திற்கு இடம் ஒத்திகைக்கு விடப்பட்டது என்பது குறித்து விளக்க வேண்டும் என்று குஜராத் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக சிபிஎஸ்இ மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தா ரஞ்சிதா

நித்யானந்தா மீது இது முதல் குற்றச்சாட்டு அல்ல. ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவாகி உள்ளன. முதலில் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருப்பதைப் போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சமீபத்தில் கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி