ஆப்நகரம்

மணப்பெண் இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்

குஜராத்தில் மணப்பெண் இல்லாமல் நடைபெற்ற திருமணம் தேசியளவில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

Samayam Tamil 13 May 2019, 3:34 pm
மூத்த மகனுக்கு தடபுடலாக நடந்த திருமணத்தை பார்த்து ஆசைப்பட்ட இளையமகனுக்கு மணப்பெண் இல்லாமல் பெற்றோர்களே திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் ஆச்சர்ய பின்னணி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
Samayam Tamil மணப்பெண் இல்லாமல் நடந்த திருமணம்- ஒரு பெற்றோர் மகனுக்கு செய்த கடமை
மணப்பெண் இல்லாமல் நடந்த திருமணம்- ஒரு பெற்றோர் மகனுக்கு செய்த கடமை



குஜராத்தின் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் பரோட்டின் அண்ணனுக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இதை பார்த்து தனக்கும் அதேபோல திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவருக்கு தோன்றியுள்ளது.

இந்த ஆசையை பெற்றோரிடம் தெரிவித்த அஜய் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தயக்கம் ஏதும் காட்டாமல் திருமண ஏற்பாடுகளில் தீவிரமடைந்தனர். அந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்ததிற்கும் காரணம் உள்ளது.

மணப்பெண் இல்லாமல் நடந்த திருமணம்- ஒரு பெற்றோர் மகனுக்கு செய்த கடமை

திருமண நாளும் வந்தது. வடயிந்திய கலாச்சரத்தின் படி இரவுநேரத்தில் நடந்த திருமணம் சம்பிரதாயத்தில், மணமகன் அஜய் பரோட் குதிரையில் ஏறவைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். உறவினர்கள் ஆடிப்பாடி மணமகனை அழைத்துச் சென்றனர்.

குதிரையிலிருந்து இறங்கி மணப்பந்தலுக்கு வந்த அஜயிக்கு திருமணமும் இனிதே நடைபெற்றது. ஆனால் அந்த திருமணம் மணப்பெண் இல்லாமல் நடந்து முடிந்தது. இளைஞர் அஜய் பரோட் மனவளர்ச்சி குன்றியவர். அவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்ட போது, அவர்களும் அதற்கு மறுப்பு சொல்லாமல் கொண்டாட்டமாக ஏற்பாடுகளை நடத்தினர்.

மணப்பெண் இல்லாமல் நடந்த திருமணம்- ஒரு பெற்றோர் மகனுக்கு செய்த கடமை


இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. குஜராத் மட்டுமின்றி நாடு முழுவதிலிருந்து அஜய் பரோட் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த செய்து சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அஜய்யின் தந்தை, அண்ணனின் திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு, அஜயிக்கும் திருமணம் செய்து ஆசை ஏற்பட்டது. இதுகுறித்து எங்களிடம் கூறிய போது தயக்கம் ஏற்பட்டது. மேலும் அவனுக்கு மணப்பெண் தேடுவதிலும் சிக்கல் இருந்தது.

அதனால் மணப்பெண் இல்லாமல் அஜய்யிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். அவனது ஆசையை நிறைவேற்றி வைத்ததில் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி