ஆப்நகரம்

குஜராத் பள்ளிகளில் இனி 'உள்ளேன் ஐயா' வுக்கு பதில் ’ஜெய்ஹிந்த்’!

குஜராத் மாநில பள்ளிகளில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து, மாணவர்கள் 'உள்ளேன் ஐயா' என்று கூறுவதற்கு பதிலாக, ’ஜெய்ஹிந்த்’ என கூற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 1 Jan 2019, 3:25 pm
குஜராத் மாநில பள்ளிகளில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து, மாணவர்கள் 'உள்ளேன் ஐயா' என்றுகூறுவதற்கு பதிலாக, ’ஜெய்ஹிந்த்’ என கூற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil download (3)


குஜராத் மாநில ஆரம்பக் கல்வி மற்றும் மேனிலைப்பள்ளி கல்வி வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள், வருகை பதிவின்போது ’உள்ளேன் ஐயா’ என சொல்வதற்குப் பதிலாக ’ஜெய்ஹிந்த்’ அல்லது ’ஜெய் பாரத்’ என்று கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்படுள்ளது.

அடுத்த செய்தி