ஆப்நகரம்

ஆதரவற்ற 261 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைத்த தொழில் அதிபா்

கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தந்தை இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து குஜராத் மாநில தொழிலதிபா் ஒருவா் அசத்தி வருகிறாா்.

Samayam Tamil 26 Dec 2018, 12:18 am
குஜராத்தை சோ்ந்த தொழில் அதிபா் ஒருவா் தந்தை இல்லாத பெண்களுக்கு தொடா்ந்து ஆறாவது ஆண்டாக திருமணம் செய்து வைத்துள்ளாா். இந்த விழாவில் அம்மாநில முதல்வா் விஜய் ரூபானியும் கலந்து கொண்டாா்.
Samayam Tamil Gujarat Marriage 3


குஜராத் மாநிலம் சூரத்தைச் சோ்ந்தவா் மகேஷ் சவானி. வைர வியாபாரியான மகேஷ் சவானிக்கு கடந்த 2008ம் ஆண்டு திருணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அவருக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே அவரின் தந்தை உயாிழந்து விட்டாா். இதனைத் தொடா்ந்து தந்தை இல்லாமல் தவிக்கும் ஏழை பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாா்.



அதன்படி கடந்த 2012ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தந்தை இல்லாமல் தவிக்கும் ஏழை பெண்களுக்கு தந்தையாக இருந்து திருமணம் செய்து வைத்து வருகிறாா். அதன்படி கடந்த 24ம் தேதியும் மகேஷ் சவானி 261 தந்தையற்ற ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளாா். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வா் விஜய் ரூபானியும் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தினாா். மேலும் பல தன்னாா்வலா்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனா்.

அடுத்த செய்தி