ஆப்நகரம்

சாதி வெறியின் உச்சக்கட்டம்: மீசை வைத்ததால் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

குஜராத்தில் இரு தலித் இளைஞர்கள் மீசை வைத்ததால் தாக்கப்பட்டுள்ளனர்.

TNN 2 Oct 2017, 1:22 pm
குஜராத்தில் இரு தலித் இளைஞர்கள் மீசை வைத்ததால் தாக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil gujarat two dalit person were beaten due to having mustache
சாதி வெறியின் உச்சக்கட்டம்: மீசை வைத்ததால் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்


காந்திநகரில் லிம்போதாரா கிராமத்தில் மீசை வைத்திருந்த காரணத்திற்காக ராஜ்புத் சமூதாயத்தினரால் இரு இளைஞர்கள் தாக்கப்பட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 25 மற்றும் 29-ம் தேதிகளில் இச்சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 29 அன்று நடந்த சம்பவத்தில் குர்ணால் மஹேரியா என்ற வாலிபர் பாராத்சிங் வகேலாவால் என்பவரால் தாக்கப்பட்டு உள்ளார்.

குர்ணால் மஹேரியா கூறியிருப்பதாவது , வெள்ளிக்கிழமை இரவு என்னுடைய நண்பரை பார்க்க சென்றேன். அப்போது வகேலா மற்றும் சிலர் என்னை இடைமறித்தனர். மீசை வைத்திருப்பதால் மட்டும் ராஜ்புத் ஆகிவிடமுடியாது என்றனர். அவர்களை புறக்கணித்து செல்ல முயன்ற போது, என்னை வகேலா தாக்கினார்,” என கூறியுள்ளார்.

அவருடைய புகாரின் கீழ் வகேலாவிற்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுதும் செய்துள்ளனர்.

செப்டம்பர் 25-ம் தேதி நடந்த சம்பவத்தில் பியுஷ் பார்மெர் என்பவரை இதே காரணத்திற்காக சிலர் தாக்கி உள்ளனர்.

இதுதொடர்பாக கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.

gujarat two dalit person were beaten due to having mustache

அடுத்த செய்தி