ஆப்நகரம்

குருகிராம் கொலை வழக்கு: சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை!!

டெல்லி அருகே குருகிராம் பள்ளியில் கொலை செய்யப்பட்ட சிறுவன், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனையில் டாக்டர் தெரிவித்துள்ளார்.

TNN 12 Sep 2017, 11:03 pm
டெல்லி அருகே குருகிராம் பள்ளியில் கொலை செய்யப்பட்ட சிறுவன், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனையில் டாக்டர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil gurugram student murder postmortem report rules out sexual assault
குருகிராம் கொலை வழக்கு: சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை!!


டெல்லி அருகே உள்ள குருகிராமில் சர்வதேச பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் ஒருவன், கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியின் கழிவறையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளான்.

அந்த சிறுவனின் உடலை கைபற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைகு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பள்ளி பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரியவந்திருப்பதாக பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் தீபக் மாத்தூர் கூறியுள்ளார்.


gurugram student murder: postmortem report rules out sexual assault

அடுத்த செய்தி