ஆப்நகரம்

கொரோனாவுக்கு போட்டியாக புதிய வைரஸ்: மக்களே உஷார்!

கொரோனாவுக்கு போட்டியாக இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 1 Jan 2021, 11:37 pm
ஏற்கெனவே கொரோனா வைரஸிடம் படாத பாடுபட்டு வரும் நிலையில் புதிய உயிர்க்கொல்லி நோய் கிளம்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சுமார் 50 காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
Samayam Tamil H5N8 virus (Representational image)


இறந்து கிடந்த காகங்களை பரிசோதனை செய்ததில் அவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலங்கடிக்கும் புதிய கொரோனா: இந்தியாவில் எண்ணிக்கை உயர்வு!
இதுகுறித்து இந்தூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலகர் பூர்ணிமா கதாரியா PTI ஊடகத்திடம் பேசியபோது, “தலி கல்லூரி வளாகத்தொல் சுமார் 50 காகங்கள் இறந்துகிடந்தன. அவற்றை பரிசோதனைக்காக போபாலுக்கு அனுப்பிவைத்தோம். அவை H5N8 பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கல்லூரி இருக்கும் பகுதியை சுற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரியை சுற்றி ஐந்து கிலோமீட்டர் வட்டாரத்தில் இருப்போரிடையே காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறதா என சுகாதார துறை ஊழியர்கள் சர்வே நடத்தி வருகின்றனர்.

மாஸ்டருக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
சந்தேகத்திற்குரிய நோயாளிகளின் மாதிரிகள் பரிசோனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. இன்று கூடுதலாக 20 காகங்கள் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி