சில தினங்களுக்கு முன் பீஹார் மாநிலத்தில் கங்கை நதியில் 71 பிணங்கள் மிதந்து வந்தன. இவை உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்தவை என பீஹார் அரசு தெரிவித்தது. பின்னர் நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை நதிக்கரையில் பல பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கை நதியில் அரைகுறையாக எரிக்கப்பட்ட பிணங்கள் மிதந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்நகர் பகுதியில் ஏழு பிணங்கள் அரைகுறையாக எரிந்த நிலையில் கங்கையில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அந்த பிணங்கள் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டன. கங்கையில் பிணங்கள் தூக்கி வீசப்படுவதை தடுக்கும் வகையில் நதிக்கரை பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கை நதியில் அரைகுறையாக எரிக்கப்பட்ட பிணங்கள் மிதந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்நகர் பகுதியில் ஏழு பிணங்கள் அரைகுறையாக எரிந்த நிலையில் கங்கையில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அந்த பிணங்கள் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டன. கங்கையில் பிணங்கள் தூக்கி வீசப்படுவதை தடுக்கும் வகையில் நதிக்கரை பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.