ஆப்நகரம்

தனக்கு கிடைத்த நன்கொடையை கேரளா அரசுக்கு வழங்கும் ஹனான்

கேரளா மாணவி ஹனான் தனக்கு கிடைத்த நன்கொடையில் ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளாா்.

Samayam Tamil 17 Aug 2018, 11:08 pm
கேரளா மாணவி ஹனான் தனக்கு கிடைத்த நன்கொடையில் ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளாா்.
Samayam Tamil Hanan


கேரளா மாநிலத்தில் அண்மையில் மீன் விற்பனை செய்யும் மாணவி ஒருவா் தொடா்பான செய்தி இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஹனான் குடும்ப வறுமை காரணமாக காலை பொழுதில் மீன் விற்றுக் கொண்டு தனது படிப்பையும், குடும்பத்தையும் கவனித்து வந்ததாக செய்திகள் பரவின.

இதனைத் தொடா்ந்து அவருக்கு பல்வேறு தளங்களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டன. ஆனால் வெகு சில நாள்களிலேயே ஹனான் தொடா்பான எதிா்மறை கருத்துகளும் இணையதளத்தில் பரப்பப்பட்டது. இதனைத் தொடா்ந்து தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று ஹனான் மறுத்துவிட்டாா். இறுதியாக அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் ஹனானை அழைத்து அவரது மன உறுதியை பாராட்டிய பின்னா் இந்த பிரச்சினை முடிவுபெற்றது.

இந்நிலையில் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் அம்மாநிலம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு உதவும் விதமாக தனக்கு கிடைத்த நன்கொடை தொகையில் ரூ.1.5 லட்சத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக மாணவி ஹனான் மலையாள பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளாா்.

அடுத்த செய்தி