மீன் விற்றுக்கொண்டே படித்து அனைவரையும் கவர்ந்த மாணவி ஹனான் பேஷன் ஷோவில் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தொடுபுழாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான். இவர் கல்லூரி முடிந்ததும் சீருடையுடன் அருகில் உள்ள சந்தையில் மீன் விற்பனை செய்கிறார். ஏழ்மையில் உள்ள குடும்பத்திற்கு உதவ, இந்த வேலையைச் செய்துகொண்டே படிப்பைத் தொடர்கிறார்.
இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி வைரலானது.இதன் மூலம் அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஓணம் - பக்ரீத் காதி கண்காட்சியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் அவர் பங்கேற்று அனைவரையும் அசத்தினார். திருவனந்தபுரத்தில் நேற்று இந்த நிகழச்சி நடைபெற்றுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஹனானைப் பாராட்டியதைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தொடுபுழாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான். இவர் கல்லூரி முடிந்ததும் சீருடையுடன் அருகில் உள்ள சந்தையில் மீன் விற்பனை செய்கிறார். ஏழ்மையில் உள்ள குடும்பத்திற்கு உதவ, இந்த வேலையைச் செய்துகொண்டே படிப்பைத் தொடர்கிறார்.
இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி வைரலானது.இதன் மூலம் அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஓணம் - பக்ரீத் காதி கண்காட்சியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் அவர் பங்கேற்று அனைவரையும் அசத்தினார். திருவனந்தபுரத்தில் நேற்று இந்த நிகழச்சி நடைபெற்றுள்ளது.