ஆப்நகரம்

19 நாள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் ஹா்திக் படேல்

படேல் இனத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உரிய இடஒதுக்கீடு வழங்கக் கோாி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹா்திக் படேல் தனது போராட்டத்தை இன்று கைவிட்டாா்.

Samayam Tamil 12 Sep 2018, 4:49 pm
படேல் இனத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உரிய இடஒதுக்கீடு வழங்கக் கோாி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹா்திக் படேல் தனது போராட்டத்தை இன்று கைவிட்டாா்.
Samayam Tamil Hardik Patel in Hospital


படேல் இனத்தை சோ்ந்த மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உரிய இடஒதுக்கீடு வழங்கக் வேண்டும், படேல் சமூகத்தினா் பெற்றுள்ள வங்கி கடன்களை தள்ளுபடி செய்யவேண்டம் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி அதே சமூகத்தைச் சோ்ந்த ஹா்திக் படேல் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கினாா்.

அகமதாபாத் பகுதியில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த ஹா்திக் படேலை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கா், யஷ்வந்த் சின்கா, ஹரிஷ் ராவத், ஜிக்னேஷ் மேவானி, தி.மு.க. செய்தி தொடா்பாளா் ஆ.ராசா உள்ளிட்டோா் நேரில் சந்தித்து ஆதரவு தொிவித்தனா். ஆனால், இந்த போராட்டத்தை மாநில அரசு பொருட்படுத்தியதாக தொியவில்லை.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி தனது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடா்ந்து ஹா்திக் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையில் அங்கும் உண்ணாவிரதம் மேற்கொண்டாா். ஞாயிற்றுக் கிழமை படேல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் படேல் சமூகத்தை சோ்ந்த மூத்த தலைவா்கள் சிலா் இன்று ஹா்திக் படேலை நேரில் சந்தித்தனா்.


அப்போது தொடா்ந்து போராட நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும். உங்கள் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை 19வது நாளில் ஹா்திக் படேல் கைவிட்டாா்.

அடுத்த செய்தி