ஆப்நகரம்

வா... மோடி வா...! கும்பலாக மொட்டை போட்டு எதிர்க்கும் படேல் சமூகத்தினர்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹர்திக் படேல் தலைமையிலான குழுவினர் மொட்டை அடித்துக் கொண்டனர்.

TNN 22 May 2017, 9:34 pm
அகமதாபாத்: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹர்திக் படேல் தலைமையிலான குழுவினர் மொட்டை அடித்துக் கொண்டனர்.
Samayam Tamil hardik patel shaves head tries to kick up dust ahead of pm narendra modis visit
வா... மோடி வா...! கும்பலாக மொட்டை போட்டு எதிர்க்கும் படேல் சமூகத்தினர்


குஜராத் மாநிலத்தில் வாழும் படேல் சமூகத்தினர், தங்களை ஓ.பி.சி பிரிவில் சேர்க்க வலியுறுத்தி, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டு, வன்முறையில் முடிந்துள்ளன. அவர்களுக்கு ஹர்திக் படேல்(23) என்ற இளைஞர் தலைமை தாங்கி, போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு நாளை வரவுள்ளார். 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மோடிக்கு, படேல் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்காக பட்டிதர் அனாமத் அன்டோலன் சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 50 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு தங்கள் மீது செலுத்தி வரும் வன்முறைகளை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு மொட்டை அடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். விரைவில் தங்கள் சமூகத்தினர் உடன் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினர். சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹர்திக் படேல், வரும் பொதுத் தேர்தலில் பாஜக அரசை தோற்கடிக்கச் செய்வதே தங்களின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார்.

Hardik Patel Shaves Head, Tries To Kick Up Dust Ahead Of PM Narendra Modi's Visit.

அடுத்த செய்தி