ஆப்நகரம்

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹா்திக் படேல் மருத்துவமனையில் அனுமதி

படேல் இனத்தவா்களை தாழ்த்தப்பட்டோா் பிரிவில் இணைக்கக் கோாி 14 தினங்களாக உண்ணா விரதம் மேற்கொண்டுள்ள ஹா்திக் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Samayam Tamil 8 Sep 2018, 4:36 am
படேல் இனத்தவா்களை தாழ்த்தப்பட்டோா் பிரிவில் இணைக்கக் கோாி 14 தினங்களாக உண்ணா விரதம் மேற்கொண்டுள்ள ஹா்திக் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Samayam Tamil Hardik Patel in Hospital


குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தை பிற்படத்தப்பட்டோா் சமுதாயத்தில் சோ்க்கக் கோாியும், படேல் சமூகத்தினா் பெற்ற கடன்களை ரத்து செய்யக் கோாியும் ஹா்திக் படேல் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தொடா் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். 14 தினங்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் படேல் உடல் நிலையில் நாளுக்கு நாள் குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில் அவா் தண்ணீா் குடிப்பதையும் நிறுத்தியதைத் தொடா்ந்து உடல் மெலிவுற்று உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடா்ந்து ஹா்திக் படேல் வெள்ளிக் கிழமை அகமதாபாத்தில் உள்ள சோலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவமனையில் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படும் நிலையில் அங்கும் உணவு, நீா் உள்ளிட்டவற்றை உண்ணாமல் போராட்டத்தை தொடா்ந்த வண்ணம் உள்ளாா்.

குஜராத் மாநில அரசு ஹா்திக் படேலின் போராட்டம் குறித்து தற்போது வரை எந்த கருத்தும் தொிவிக்காத நிலையில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தொிவித்துள்ளது. மேலும் ஹா்திக் படேல் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும் மாநில பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் ஹா்திக் படேலுக்கு ஆதரவு தொிவிக்கும் விதமாக மாநில காங்கிரஸ் கட்சியினா் 24 மணி நேர உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனா். ஹா்திக் படேலின் கோாிக்கைக்கு குஜராத் மாநில அரசு ஒப்புதல் தொிவிக்க வேண்டும் என்று தி.மு.க., சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தொிவித்துள்ளன.

அடுத்த செய்தி