ஆப்நகரம்

கெமிக்கல் பாய்லர் வெடித்து 4 பேர் பலி, அச்சத்தில் மக்கள்!

ஹரியானாவில் ரசாயன தயாரிக்கும் தொழிற்சாலையில் பாயிலர் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 27க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 29 Feb 2020, 9:29 am
ஹரியானா மாநிலம் பாஹாதுர்கார்ஹ் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி 4பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி சுமார் 27க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil khkgvkgk


ஹரியானா மாநிலத்தில் இயங்கி வரும் ரசாயன தயாரிக்கும் தொழிற்சாலையில், பாய்லெர் பகுதி நேற்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்து பாஹாதுர்கார்ஹ் தொழிற்சாலை பகுதியில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 27பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக பாய்லெர் அமைந்திருந்த பகுதி வெடித்து சிதறி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. விபத்து நடந்தபோது தொழிற்சாலைக்கு அருகிலிருந்த 4பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

Fake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோவை பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி!!

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் ஹரியானா போலீஸ், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என பல்வேறு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரசாயனம் தயாரிப்பின்போது விபத்து ஏற்பட்டிருப்பதால், அந்த பகுதியில் காற்றைச் சோதிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 4பேரின் குடும்பத்தாருக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த பயங்கர விபத்து ஹரியானா மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி