ஆப்நகரம்

ஹரியானாவில் கடும் பனிப்பொழிவு: வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் பலி!

ஹரியானா மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் என மொத்தம் 8 பேர் பலியாயினர்.

Samayam Tamil 24 Dec 2018, 7:55 pm
ஹரியானா மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 8 பேர் பலியாயினர்.
Samayam Tamil haryana_1



டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளையே முடங்கினர். சாலைகளே தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகம் உள்ளதால், ரயில், விமான உள்ளிட்டபோக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 8 பேர் பலியாயினர். ரோக்தாக்- ரிவாரி நெடுஞ்சாலையில் உள்ள ஜாகர் மேம்பாலத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், எதிரெதிர் திசையில் வந்த இரு வாகனங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்கள்ளாகின.

தொடர்ந்து அதற்கு பின்னால் வந்த அடுத்தடுத்த வாகனங்களும் விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதின. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் என மொத்தம் 8 பேர் பலியாயினர். இவர்களில் பெண்கள் 6 பேர். அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்டெடுத்தனர்.

அடுத்த செய்தி