ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு: அரசு போட்ட கண்டீஷன்!

டிசம்பர் 14ஆம் தேதி முதல் பள்ளிகல் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 10 Dec 2020, 11:32 pm

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது.
Samayam Tamil School children


இந்நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி மூன்று மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.

பொதுத்தேர்வுகள் எப்போது? சிபிஎஸ்சி பதில்!

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுடன் தினசரி வகுப்புகள் நடைபெறும் என ஹரியானா பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9ஆம் மற்றும் 11ஆம் வகுப்பு உள்பட சீனியர் மாணவர்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. வகுப்புகளுக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகவே கோவிட்-19 பரிசோதனை சான்றிதழையும் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

'உறியடி' நாயகனின் புதிய கூட்டணி!

தமிழகத்தில் நவம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு கருதி பள்ளிகளை திறக்க வேண்டாம் என பெற்றோர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துவிட்டது.

தமிழகத்தில் எந்நேரமும் பள்ளிகளை திறக்க அரசு தயாராக இருப்பதாகவும், பெற்றோரின் கருத்துகளுக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி