ஆப்நகரம்

120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஹரியான மந்திரவாதி கைது!

ஹரியானவை சேர்ந்த ஆன்மிக குரு மற்றும் மந்திரவாதி ஒருவர், 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததை தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 3:19 pm
ஹரியானவை சேர்ந்தஆன்மிக குரு மற்றும் மந்திரவாதி ஒருவர், 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததைதொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil haryana_tantrik_held_for_raping_120_women_1532151267_725x725


ஹரியானா மாநிலம், ஃபெஹாபாத் மாவட்டத்தில் உள்ள டோஹானா பகுதியை சேர்ந்தவர் பாபா அம்புரி. இவர் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பதால், அடிக்கடி பெண்கள் இவரை தேடி வருவது வழக்கம். மேலும் இதை அடிப்படையாக வைத்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அத்துடன் விட்டுவிடாமல் அதை வீடியோவாக பதிவு செய்து, சமந்தப்பட்ட பெண்களை மிரட்டி இருக்கிறார்.

இப்படி சுமார் 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் . ஒன்பது மாதங்களுக்கு முன் இவருக்கு எதிராக ஒருபெண்ணின் கணவர் புகார் அளித்தார். அந்த புகாரில் கோவிலில் வைத்து அவரது மனைவியை வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் அவர் சில நாட்களிலேயே விடுதலை ஆனார்.

இந்நிலையில் மீண்டும் சில பெண்கள் இவர் மீது புகார்கொடுத்தனர். அதன் அடிப்படையில் இவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அடுத்த செய்தி