ஆப்நகரம்

ஹரியானா கிராமத்தில் ஓயாமல் ஒலிக்கும் தேசிய கீதம்; ஒருநாள் கூட ரெஸ்ட் இல்லை!

ஹரியானாவில் நாள்தோறும் தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது.

TNN 5 Jan 2018, 6:38 am
பரிதாபாத்: ஹரியானாவில் நாள்தோறும் தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது.
Samayam Tamil haryana village plays national anthem daily
ஹரியானா கிராமத்தில் ஓயாமல் ஒலிக்கும் தேசிய கீதம்; ஒருநாள் கூட ரெஸ்ட் இல்லை!


ஹரியானாவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் அங்குள்ள பஹாக்பூர் கிராமத்தில் நாள்தோறும் காலையில் தேசிய கீதம் ஒலிக்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய கிராம தலைவர், தினமும் தேசிய கீதம் ஒலிபரப்ப உத்தரவிட்டுள்ளோம்.

இதற்காக கிராமத்தின் 20 இடங்களில் ரூ.2 லட்சம் செலவில் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பாகும் போது, கிராமவாசிகள் மரியாதை செலுத்துகின்றனர்.

இதனை தங்கள் தேசியப் பற்று என பெருமிதம் கொள்கின்றனர். இதேபோல் தெலுங்கானா மாநிலம் ஜமிகுண்டா கிராமத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Haryana village plays National Anthem daily.

அடுத்த செய்தி