ஆப்நகரம்

ரூ. 10 லட்சம் வேண்டும்; கிரிக்கெட் வீரர் முகமது சமி மீது மனைவி ஹசீன் ஜாகன் புகார்

கிரிக்கெட் வீரர் முகமது சமி, வாழ்வாதாரத்துக்காக தனக்கு மாதம் மாதம் 10 லட்சம் ரூபாய் நிதி கொடுக்க வேண்டும் என்று அவரது மனைவி ஹசீன் ஜாகன் இன்று அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Samayam Tamil 11 Apr 2018, 1:56 pm
கிரிக்கெட் வீரர் முகமது சமி, வாழ்வாதாரத்துக்காக தனக்கு மாதம் மாதம் 10 லட்சம் ரூபாய் நிதி கொடுக்க வேண்டும் என்று அவரது மனைவி ஹசீன் ஜாகன் இன்று அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil Hasin Jahan demands Rs 10 lakh a month as maintenance from Mohammad Shami


இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமியின் மனைவி ஹசீன் ஜாகன். இவர், தன்னை துன்புறுத்துவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பாகிஸ்தானை சேர்ந்த அலிஷபா என்பவரிடம் இருந்து முகமதுசமி பணம் வாங்கினார், என்றும் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்துக்காக இந்த பணம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் புகார் அளித்திருந்தார்.

தொடர்நது, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து, தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முகமது சமியை விளையாட அனுமதி அளிக்கக் கூடாது என்றும் முறையி்ட்டார்.

இதனிடையே நடந்த விபத்து ஒன்றில், கிரிக்கெட் வீரர் முகமது சமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை காண மருத்துவமனைக்கு சென்ற போது, மனைவி ஹசினை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். தற்போது முகமது சமி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், வாழ்வாதாரத்துக்காக மாதம் மாதம் 10 லட்சம் ரூபாய் நிதியை கிரிக்கெட் வீரர் முகமது சமி கொடுக்க வேண்டும் என்றுஅவரது மனைவி ஹசீன் ஜாகன் இன்று அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் கூறியுள்ள மனுவில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முகமது சமி, மாதம் 1 லட்சம் கொடுப்பது என்பது அவருக்கு சாதரணமான விஷயம் தான் என்றும், என்னையும் என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள தனக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி