ஆப்நகரம்

வசமாக மாட்டிக்கொண்ட தஷ்வந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்

சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்த் போலீஸாரிடமிருந்து தப்பிய நிலையில், அவர் மீண்டும் மும்பையில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

TNN 9 Dec 2017, 4:34 pm
மும்பை : சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்த் போலீஸாரிடமிருந்து தப்பிய நிலையில், அவர் மீண்டும் மும்பையில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
Samayam Tamil hasini murder case accused dhavanth take 3 days police custody
வசமாக மாட்டிக்கொண்ட தஷ்வந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்


சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஹாசினி (6), வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி மாயமானார். இது குறித்து காவல் துறையில் ஹாசினியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தஷ்வந்த் (22) என்பவர் பிடிபட்டார்.

இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் தன் தாயை கொன்று 25 பவுன் நகையை எடுத்து தலைமறைவானார். 5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை மும்பை போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து தப்பித்தவனை மீண்டும் போலீஸார் நேற்று பிடித்து இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.



இந்நிலையில், அவரு 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கும்படியும், டிச., 12ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இன்றிரவு மும்பையிலிருந்து சென்னைக்கு தஷ்வந்த் அழைத்து வரப்படுகிறார்.

அடுத்த செய்தி