ஆப்நகரம்

இது சும்மா; இதைவிட பெரிய ஆட்டத்தலாம் பாத்திருக்கேன்; டுவிஸ்ட் கொடுத்த ஆளுநர்!

ஆளுநர் வருகையின் ஏற்பட்ட அமளியால் இன்று சட்டமன்றம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

Samayam Tamil 29 Jan 2020, 1:19 pm
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையை கேரள மாநிலம் பெற்றது.
Samayam Tamil Arif


இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் தெரிவித்தது.

கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் வழக்கு தொடரப்பட்டது பற்றி அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சனம் செய்திருந்தார். என்னிடம் ஏன் கேட்கவில்லை என்றும், மக்களின் வரிப்பணத்தை இப்படி செலவு செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

CAAக்கு எதிராக இப்படியா? அதுவும் தேசத்துரோகம்; சிக்கிய பள்ளி - பாவம் மாணவர்கள்!

இந்நிலையில் கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. இதில் முதல் நாள் உரையை ஆற்றுவதற்காக ஆளுநர் ஆரிப் கான் வருகை புரிந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

அங்கிருந்து வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள் உதவியுடன் உள்ளே சென்றார். அப்போதும் காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.

இதன் காரணமாக அவர்கள் பாதுகாவலர்கள் உதவியுடன் வெளியே அனுப்பப்பட்டனர். பின்னர் அவை கூடியது. ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூச்சலிடத் தொடங்கினர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகத்தை வாசிக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டு வாசகத்தை வாசித்தார். முதலமைச்சர் பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்றும், பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இவ்வாறு செய்ததாக ஆளுநர் ஆரிப் கான் விளக்கம் அளித்தார்.

மனு தள்ளுபடி - நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி!

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், நான் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த போது, இதைவிட பெரிய எதிர்ப்பை எல்லாம் சந்தித்திருக்கிறேன் என்று கூறினார்.

அடுத்த செய்தி