ஆப்நகரம்

ஆர்.எஸ்.எஸ் ஆண்டுவிழாவுக்கு ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினரா?

இந்தியாவின் தற்போதைய அரசியலில் பெரும்பங்கு வகிக்கும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் இருந்து வருகிறது. இந்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பெறும் தசரா விழாவும், விஜயதசமியும் தேசிய அளவில் அரசியல் கவனம் பெறக்கூடியவை..

Samayam Tamil 23 Sep 2019, 4:35 pm
இந்தியாவின் தற்போதைய அரசியலில் பெரும்பங்கு வகிக்கும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் இருந்து வருகிறது. இந்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பெறும் தசரா விழாவும், விஜயதசமியும் தேசிய அளவில் அரசியல் கவனம் பெறக்கூடியவை..
Samayam Tamil shiv nadar


1925 ஆம் ஆண்டு முதன்முதலாக, ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ் ஐத் தோற்றுவித்தது விஜயதசமியில்தான் என்பதால், ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளுள் , விஜயதசமி நிகழ்ச்சி மட்டும் தனித்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

காரணம், இந்தியாவை இந்து நாடாக ஆக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ் இன் பல்வேறு கிளை அமைப்புகளுள், ஆட்சி அதிகாரத்திற்காக தொடங்கப்பட்ட கிளை அமைப்புதான் “பாஜக” என்பதை புரிந்து கொள்வதன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சிகள் பெறும் அரசியல் கவனத்தை புரிந்துகொள்ள முடியும்..

இதில் கலந்து கொள்ளும் தலைவர்களும், அவர்களது உரையும் ,அந்த நாளில் சர்வதேச அளவில் கவனம் பெறும். இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான விஜயதசமி மற்றும் ஆண்டுவிழா வுக்கு சிவ நாடார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இதனால், விஜயதசமி நிகழ்ச்சிகளும், அந்த உரைகளும் பெருமளவில் கவனிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற தசரா விழாவின்போது கூட, ஆர் எஸ் எஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் மோகன் பகவத் “இந்துத்துவம் தான் இந்தியாவின் முடிவற்ற பண்பாடு. ஆனால், இந்துக்கள் இதை உணர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் விஜயதசமி நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தை சேர்ந்தவரும், இந்தியாவின் ஐடி துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவருமான சிவ நாடார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

சிவ நாடார் யார் ?
ஐ.டி துறையில் ஆசியாவின் மிகச்சிறந்த 50 நிறுவனங்களில் ஒன்று எச்.சி.எல். உலகெங்கும் 44 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள எச்.சி.எல் நிறுவனம், ஆண்டுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டுகிறது. இந்த எச்.சி.எல் தொழில்நுட்ப குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் தான் தமிழகத்தை சேர்ந்த சிவ நாடார்.

இந்தியாவின் மிகப்பெரிய மதவாத அமைப்பு, மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனரை சிறப்பு விருந்தினராக அழைப்பது எந்த மாதிரியான மாற்றத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்..

அடுத்த செய்தி