ஆப்நகரம்

கதறி அழுத காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரின் தாய்!!

தன்னுடைய மகன் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் டிகே சிவகுமாரின் தாய் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Samayam Tamil 6 Sep 2019, 5:42 pm
கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமாரை சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் அவரது தாயை முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி இன்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, சிவகுமாரின் தாய் கதறி அழுதார்.
Samayam Tamil DK 5


கனகபுராவில் இருக்கும் சிவகுமாரின் தாய் கவுரம்மாவை சந்தித்து ஹெச்டி குமாரசாமி ஆறுதல் அளித்தார். ''உங்களது மகனுக்கு ஒன்றும் ஆகாது. அவர் தைரியத்துடன், நம்பிக்கையுடன் இருக்கிறார். நீங்கள் மன வருத்தம் அடைய வேண்டாம்'' என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குமாரசாமி, ''பாஜக தவறான வழிகளில் சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற சிவகுமார் முயற்சித்தார். இதற்கு பழி வாங்கும் விதமாக தற்போது சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.

கேந்திரிய வித்யாலயா பாடத்தில் சர்ச்சை கேள்வி: மாணவர்கள் அதிர்ச்சி!!

அடுத்த செய்தி