ஆப்நகரம்

கர்நாடகாவில் நிலவும் தொடர் குழப்பம்; சட்டமன்றத்தில் உறங்கிய எடியூரப்பா

கர்நாடகா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் சட்டமன்றத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 19 Jul 2019, 8:19 am
கர்ணாடகா மாநில முதல்வர் குமாரசாமி இன்று பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்திய நிலையில், பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலேயே இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
Samayam Tamil Yeddyurappa Sleep.


கர்நாடகாவில் குமாரசாமி தலைமையலான ஆட்சி நீடிக்குமா, கவிழுமா என்ற எதிர்பார்ப்பில் அம்மாநில சட்டமன்றம் நேற்று காலை கூடியது. முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது என அழுத்தம் கொடுக்காதீர்கள் என எதிர்க்கட்சிக்கு கோரிக்கை விடுத்தார். அப்போது அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா ஒழுங்கு பிரச்சினையை கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து சட்டமன்றம் அவ்வபோது ஒத்தி வைக்கப்பட்டது.


சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜகவினர் கடத்தியதாக அமைச்சர் சிவக்குமார் குற்றம் சாட்டியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேண்டுமென்றே நேரத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டிய பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுத்தது.

மேலும் இது தொடர்பாக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா இன்று பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கெடு விதித்தார். இதனைத் தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.


நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்துவகை கண்டித்து எடியூரப்பா தலைமையில் பாஜக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் சட்டமன்றத்தில் தங்கி தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்கள், காலை நேரத்தில் சட்டமன்ற வளாகத்திலேயே நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

அடுத்த செய்தி