ஆப்நகரம்

பாதுகாப்பு படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; தலைமை காவலா் உயிாிழப்பு

காஷ்மீாில் பனிஹால் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தலைமை காவலா் ஒருவா் உயிாிழந்தாா்.

TOI Contributor 21 Sep 2017, 12:46 am
காஷ்மீாில் பனிஹால் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தலைமை காவலா் ஒருவா் உயிாிழந்தாா்.
Samayam Tamil head constable lost his life in terrorist attack
பாதுகாப்பு படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; தலைமை காவலா் உயிாிழப்பு


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினரின் 14 வது பட்டாலியன் பிரிவு முகாம் உள்ளது. இன்று திடீரென அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படை முகாமை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் சுதாரித்துக்கொண்டு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி