ஆப்நகரம்

இதய நோயால் 2 மாத குழந்தை மரணம்!!! விமானம் அவசர தரையிறக்கம்

இதய நோயால் பாதிக்கப்பட்ட 2 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக பெங்களூர் செல்ல வேண்டிய விமானம் ராய்ப்பூரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

TNN 24 Sep 2016, 4:58 am
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலிருந்து, கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு தனியார் விமானம் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில், இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 2 மாத குழந்தைக்கு பெங்களூரில் சிகிச்சை அளிக்க பெற்றோர் புறப்பட்டு சென்றனர்.
Samayam Tamil heart disease is the 2 month old baby to death emergency landing aircraft
இதய நோயால் 2 மாத குழந்தை மரணம்!!! விமானம் அவசர தரையிறக்கம்


ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு உடல் நிலை மோசமானது. இதன் காரணமாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தை இறந்தது தெரியவந்தது. குழந்தை இறந்தது செய்தி கேட்டு குழந்தையின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதன் பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றது.

அடுத்த செய்தி