ஆப்நகரம்

ஜம்முவில் அத்துமீறி பாகிஸ்தான் தொடர் தாக்குதல்; 4 பேர் பலி!

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், 4 பேர் பலியாகினர்.

Samayam Tamil 23 May 2018, 4:32 pm
காஷ்மீர்: சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், 4 பேர் பலியாகினர்.
Samayam Tamil Jammu attack


ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா, சம்பா மாவட்டத்தை ஒட்டி சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் படை தொடர்ந்து 9வது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, இன்று காலை 9 மணியளவில் சம்பா பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில் இருவர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.

கத்துவா பகுதியில் குடியிருப்பு, முகாம்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மூவர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஒருவர் உயிரிழந்தார்.

ஆர்.எஸ்.புரா பிரிவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மூன்று எல்லையோர பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Heavy firing and shelling by Pak troops killed 4 civilians.

அடுத்த செய்தி