ஆப்நகரம்

பெங்களூருவின் பல மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் வெள்ளம்

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.

TOI Contributor 5 Oct 2017, 6:59 pm
பெங்களூரு : கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.
Samayam Tamil heavy rain lashes bengaluru since many hours
பெங்களூருவின் பல மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் வெள்ளம்


பெரும்பாலும் இரவு நேரங்களில் தொடர் மழையாக பெய்து வந்த நிலையில் தற்போது பகல் நேரத்தில் இவ்வளவு நேரம் பெய்துள்ளது. மதியம் தொடங்கிய மழை மாலை வரை தொடர்ச்சியாக பெய்து பெங்களூரை குளமாக்கியது..

செப்டம்பர் மாதத்தில் 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு சாதனை மழை பெய்துள்ளது. இந்த கனமழை தற்போது அக்டோபர் மாதம் தொடங்கியும் தொடர்ந்து வருகிறது.

பெங்களூருவின் பல மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் வெள்ளம்#HeavyRain #RaininBengaluru #bangalore #rain #bengaluru #பெங்களூர் #மழை pic.twitter.com/RDtfx0Y27X — Samayam Tamil (@SamayamTamil) October 5, 2017

இன்று பெய்த கனமழை நகரின் தாழ்வான பகுதிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் பன்னாருகட்டா சாலை, ஜேபி நகர் 3வது ஸ்டேஜ் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. Bengaluru: Water-logging in parts of the city after heavy rain pic.twitter.com/H4dnGXAl4b — ANI (@ANI) October 5, 2017
இதே போல கன்னிகாம் ரோடு, எலக்ட்ரானிக் சிட்டி, மடிவாளா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. மழைநீர் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்ததால் மக்கள் அவதியில் உள்ளனர்.

அடுத்த செய்தி