ஆப்நகரம்

மேளம் போல் இடி இடிக்க... பெங்களூருவை வாழ்த்திய கன மழை

கோடையில் கொட்டித் தீர்த்து பெங்களூருவை கனமழை குளுமையாக்கியுள்ளது .

Samayam Tamil 10 May 2018, 8:58 pm
பெங்களூரு : கோடையில் கொட்டித் தீர்த்து பெங்களூருவை கனமழை குளுமையாக்கியுள்ளது .
Samayam Tamil rain


இன்று மதியம் முதல் பெங்களூருவின் சில இடங்களில் பரவலாக லேசான மழை பெய்தது. இந்நிலையில் இரவு 7.45 மணியளவில் தொடங்கிய கனமழை இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்தது.
பெங்களூருவின் தாழ்வான பகுதியில் இந்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

சாதாரணமாகவே மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது பெயத கனமழை காரணமாக பெங்களூருவின் முக்கிய பகுதிகளான எம்ஜி ரோடு, இந்திரா நகர், சிவாஜி நகர், மெஜஸ்டிக், கே ஆர் மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.

அடுத்த செய்தி