மும்பையில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிய போது, தினமும் யாரோ எனது கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன் என, பிரபல பாலிவுட் நடிகையும், பா.ஜ.க., எம்.பி.,யுமான ஹேம மாலினி தெரிவித்து உள்ளார்.
தமிழில், "இது சத்தியம்" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேம மாலினி. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், உத்தர பிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதி உறுப்பினர் ஆவார்.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேம மாலினி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: எனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில், சில நாட்கள் பேய் வசித்த வீட்டில் வசித்து வந்தேன். 'ஸ்வப்னா சவுதாகர்' (1968) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாந்த்ராவில் உள்ள மன்வேந்திரா அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினோம்.
அந்த பிளாட் மிகவும் சிறியதாக இருந்தது. அதன் பிறகு ஜூஹுவின் 7வது சாலையில் உள்ள பங்களாவில் தங்கினோம். அந்த பங்களாவில் என் தாயுடன் தூங்கினேன். அப்போது, அங்கு தங்கிய ஒவ்வொரு நாள் இரவும் யாரோ ஒருவர் என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன்.
இந்த விஷயங்கள் கொஞ்சம் விசித்திரமாகத் தெரியலாம். ஆனால், அது உண்மை. ஒரு முறை அல்லது இரண்டு முறை நடந்திருந்தால் கூட அதைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால், மீண்டும் மீண்டும் யாரோ என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன்.
அப்போதெல்லாம், ஒருவித அச்ச உணர்வுடனே இருந்தேன். அதன் பிறகு நாங்கள் அந்த வீட்டை காலி செய்து விட்டு, சொந்தமாக தனி குடியிருப்பை விலைக்கு வாங்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை பாலிவுட் நடிகை ஹேம மாலினி தற்போது பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில், ஹேம மாலினி அளித்த பேட்டி தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில், "இது சத்தியம்" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேம மாலினி. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், உத்தர பிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதி உறுப்பினர் ஆவார்.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேம மாலினி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
அந்த பிளாட் மிகவும் சிறியதாக இருந்தது. அதன் பிறகு ஜூஹுவின் 7வது சாலையில் உள்ள பங்களாவில் தங்கினோம். அந்த பங்களாவில் என் தாயுடன் தூங்கினேன். அப்போது, அங்கு தங்கிய ஒவ்வொரு நாள் இரவும் யாரோ ஒருவர் என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன்.
இந்த விஷயங்கள் கொஞ்சம் விசித்திரமாகத் தெரியலாம். ஆனால், அது உண்மை. ஒரு முறை அல்லது இரண்டு முறை நடந்திருந்தால் கூட அதைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால், மீண்டும் மீண்டும் யாரோ என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன்.
அப்போதெல்லாம், ஒருவித அச்ச உணர்வுடனே இருந்தேன். அதன் பிறகு நாங்கள் அந்த வீட்டை காலி செய்து விட்டு, சொந்தமாக தனி குடியிருப்பை விலைக்கு வாங்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை பாலிவுட் நடிகை ஹேம மாலினி தற்போது பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில், ஹேம மாலினி அளித்த பேட்டி தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.