ஆப்நகரம்

இனி காஷ்மீரில் பழங்குடியினத்தவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகை- நிதி அமைச்சர் அறிவிப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை வரவேற்று தலைவர்கள் பலர் மத்திய பாஜக அரசை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த நடவடிக்கையில் முக்கிய பயன்களில் ஒன்றாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இனி சலுகைகள் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Aug 2019, 5:48 pm
காஷ்மீரில் பெண்களுக்கு இதுநாள்வரை அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது; சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் சலுகைகளை பெறமுடியும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil nirmala

இத்தனை ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் கல்வி, வேலை வாய்ப்பு மிகக் குறைவு. அங்கு வாழும் மக்கள் பலர் கல்வி அறிவு இல்லாதவர்களாகவே இருந்தார்கள். பலர் குடிசைத் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு கல்வி புகட்டி, இட ஒதுக்கீடு, மானியம், சிறப்பு சலுகைகள் வழங்கி, இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் உள்ளதுபோலவே முன்னேற்ற இனி மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என பாஜகவினர் கூறுகின்றனர்.

இதனால் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் பெண்கள் படித்து வேலைக்குச் செல்லும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.
காலை முதலே பல கட்சித் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்துவந்த நிலையில் தற்போது மத்திய பாஜக அரசின் இந்த முயற்சிக்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி டுவிட்டரில் தனது வாழ்த்து செய்தியில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்றுப் பிழையை சரிசெய்ததற்காக பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தேசத்தின் ஒருங்கிணைப்புக்கான முக்கிய முடிவு இது என்றும் அவர் கூறியுள்ளார்.

Kashmir Latest News: ஜம்மு காஷ்மீருக்கான அரசியலமைப்புச் சட்ட உத்தரவு அமித் ஷா தாக்கல்!!

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், மறைந்த முன்னாள் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் கனவை நனவாக்குயுள்ளார் மோடி என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாக உடைந்த ஜம்மு காஷ்மீர் - புதிதாக இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம்!

ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படும் எனத் தெரிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். எப்போது மோடியுடன் எதிர் கருத்துக்களையே கொண்டிருக்கும் அரவிந்த் தற்போது பாஜகவின் இந்த முடிவை வரவேற்றுள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் வேற்றுமையைச் சுட்டெரித்த நெருப்பு நாள் இன்று. காஷ்மீர் பிரச்னையை மதம் சார்ந்த பிரச்னையாகப் பார்க்காமல், மனம் சார்ந்த பிரச்னையாகப் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி