ஆப்நகரம்

திருப்பதி கோயிலில் நிகழ்ந்த அதிசயம்; நெகிழ்ந்து போன அர்ச்சகர்கள்!

அர்ச்சகர்களின் ஏழுமையான் சேவை தொடர்பாக ஆந்திர முதல்வர் பிறப்பித்த உத்தரவை திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Apr 2021, 9:49 am
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள் சேவை செய்து வருகின்றனர். இந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு காலங்காலமாக திருமலை கோயிலில் சேவை செய்யும் உரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டு குடும்பங்களுக்கு ஒருமுறை என சுழற்சி முறையில் தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி வருகிறது.
Samayam Tamil hereditary priests of tirumala temple thanks cm jagan mohan reddy for restore their rights
திருப்பதி கோயிலில் நிகழ்ந்த அதிசயம்; நெகிழ்ந்து போன அர்ச்சகர்கள்!


பாரம்பரிய அர்ச்சகர் பணி

அவர்களில் ஒருவர் தலைமை அர்ச்சகராக செயல்படுவார். இவரது தலைமையின் கீழ் தான் ஏழுமலையானுக்கு பூஜைகள், விழாக்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்த போது, அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது நிர்ணயிக்கப்பட்டு அப்போதைய திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தீர்மானம் நிறைவேற்றியது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அதன்படி, 2018ஆம் ஆண்டு திருமலை கோயில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா சுவாமி கோயில், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயில் ஆகியவற்றில் சேவையாற்றி வந்த 14 அர்ச்சகர்கள் ஓய்வு பெற்றனர். ஆனால் இதனை எதிர்த்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் அர்ச்சகர்கள் வழக்கு தொடுத்தனர். அதில், தங்கள் குடும்பங்கள் ஏழுமலையானுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


இமயமலையில் ஏழுமலையான் சர்ப்ரைஸ்; தேவஸ்தானம் செம ஹேப்பி!

அர்ச்சகர்களின் கோரிக்கை ஏற்பு

எனவே ஓய்வு பெறும் வயதை நிர்ணயித்து எங்களின் சேவைக்கு தடை விதிக்கக் கூடாது. எங்களால் இயன்ற வரை சேவை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அர்ச்சகர்களின் கோரிக்கையை உடனடியாக அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. ஆனால் 2018ஆம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்காலிகமாக தேவஸ்தானம் நிறுத்தி வைத்தது.

சம்மதம் தெரிவித்த தேவஸ்தானம்

இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதையடுத்து அக்டோபர் 2019ல் அர்ச்சகர்களின் பாரம்பரிய உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த உத்தரவு அமல்படுத்தாமல் இருந்து வந்தது. கடந்த வாரம் வரை நீதிமன்றம் மற்றும் அரசாணையை செயல்படுத்தாமல் இருந்த தேவஸ்தான நிர்வாகம் ஒருவழியாக ஏற்றுக் கொண்டது.


கொரோனா தடுப்பூசி போட்டு கண், காது, முகம் வீங்கிவிட்டது: பார்த்திபன்

ஓய்வுபெற்றவருக்கு மீண்டும் பணி

இதையடுத்து ஏற்கனவே ஓய்வுபெற்ற அர்ச்சகர்களை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தலைமை அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதர் மீண்டும் அதே பணியில் நியமிக்கப்படவுள்ளார். இதனால் தற்போது அந்தப் பணியில் இருக்கும் வேணுகோபால தீட்சிதரின் நிலை என்னவென்று கேள்வி எழுந்துள்ளது.


இன்னும் 10 நாட்கள் தான்; திருப்பதி தரிசனத்தில் புதிய மாற்றம்!

முதல்வருக்கு நேரில் நன்றி

தேவஸ்தான நடவடிக்கையை தொடர்ந்து, தடேபள்ளியில் உள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத்திற்கு சென்று ஏ.வி ரமண தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் அவரை சந்தித்துள்ளனர். அப்போது தங்களின் பாரம்பரிய உரிமையை மீட்டெடுத்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அடுத்த செய்தி