ஆப்நகரம்

10 கோடி கொரோனா தடுப்பூசி: டீல் பேசி முடித்த இந்தியா!

கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹெட்டிரோ லேப்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Samayam Tamil 27 Nov 2020, 5:36 pm

ரஷ்யா சார்பில் ஸ்புட்னிக் V என்ற கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான டீல் இந்திய நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Sputnik V vaccine


ஹைதராபாத்தை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ஹெட்டிரோ லேப்ஸ் (Hetero Labs) நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கவிருக்கிறது.

இதுகுறித்து ரஷ்ய சவரன் நிதியத்தின் தலைமை செயலதிகாரி கிரில் திமித்ரீவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் பாதுகாப்பான, சக்திவாய்ந்த ஸ்புட்னிக் V தடுப்பூசியை இந்திய மண்ணில் உற்பத்தி செய்ய ரஷ்ய சவரன் நிதியமும், ஹெட்டிரோ நிறுவனமும் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கொரோனா தடுப்பூசியில் புதிய சிக்கல்!

இதனால் எங்களது உற்பத்தி திறனை கணிசமாக உயர்த்தி, இந்திய மக்களுக்கு கொரோனாவுக்கான சக்திவாய்ந்த தீர்வை வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹெட்டிரோ லேப்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறை இயக்குநர் முரளி கிருஷ்ணா ரெட்டி பேசியபோது, ரஷ்ய தடுப்பூசியின் இந்திய சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அனைத்து நோயாளிகளுக்கும் விரைவாக தடுப்பூசி கிடைக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி