ஆப்நகரம்

வளர்ச்சி மேம்பாட்டு குறியீட்டில் முன்னணியில் ஹிமாச்சல், கேரளா, தமிழகம்!

புதுடெல்லி: இந்தியாவில் வளர்ச்சி - மேம்பாட்டிற்கான குறியீட்டில் இமாச்சல், கேரளா, தமிழகம் ஆகியவை முன்னணியில் உள்ளன.

Samayam Tamil 22 Dec 2018, 5:55 pm
ஒவ்வொரு நாட்டிற்கும் நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை ஐ.நா வகுத்துள்ளது. இதில் 13 இலக்குகளின் அடிப்படையில் எஸ்.டி.ஜி இந்தியா குறியீட்டை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil SDG Report


இதுகுறித்து பேசிய நிதி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் காந்த், மாநிலங்களின் முன்னேற்றம் மூலமே நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட முடியும். வளர்ச்சிக்கான போட்டியை உருவாக்க எஸ்.டி.ஜி இந்தியா குறியீட்டெண் வெளியிடப் பட்டுள்ளதாகக் கூறினார்.

இதன் அடிப்படையில் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இமாச்சலப் பிரதேசம், கேரளா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன. தூய குடிநீர், துப்புரவு, மலைகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக இமாச்சலப் பிரதேசத்திற்கு அதிக புள்ளிகள் கிடைத்துள்ளது.

அதாவது 69 புள்ளிகள் பெற்றுள்ளது. சிறந்த சுகாதாரம், பசிக் கொடுமை ஒழிப்பு, ஆண் - பெண் சமத்துவம் எட்டுவது, தரமான கல்வி வழங்குவது தொடர்பாக கேரளா 69 புள்ளிகள் பெற்றுள்ளது.

இதற்கடுத்து வறுமை ஒழிப்பு, தூய மற்றும் கட்டுப்படியாகக்கூடிய எரிசக்தி வழங்குவது தொடர்பான இலக்குகளை எட்டுவதில் தமிழகம் 66 புள்ளிகள் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி